திங்கள், 2 செப்டம்பர், 2013

மழை நாளில் ...

நாட்கள் நான்காயின
நனைந்த மாலையென ...
 
தொடர் மழையின் யுத்தமும்
சில்லென்ற காற்றின் முத்தமும்
கேட்கும் பாட்டின் சத்தமும்
 பரவசமாக்குகின்றது மனதை
பவித்ரமாக்குகிறது  காற்றை ...

மழைக்கு முன்பான
சுழிக்கும் காற்றோடு
என்மகளின்  ஓட்டத்தை
துரத்திப் பிடித்தேன்
தூறலின் துணையோடு..

கணவரோடு தேநீரும் ,
மகளோடு வாய்ப்பாட்டும் ,
வாய்ப்புகள்  நன்று
வசந்தத்தை உணர...

ஒன்றேகால் வயது மகளோ
இசைகேட்டு ஆடுகின்றாள்;

மழையாலே இத்தருணம்
ஆனது ஆனந்தம் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக