திங்கள், 2 செப்டம்பர், 2013

சில்லென்ற காற்றில்...

சில்லென்ற காற்றும்
சல்லென்ற மழையுமாய்
சொல்லொனா இன்பம்
சொல்லாமல் எனை மீட்ட ...

பாய்ந்து வரும் நீராய்
பரவசமும் எனைக் கூட்ட ...

காற்றாய் உனை எண்ணி
நாற்றாய் உன்னோடு சாய...

புத்துணர்வின் இனிமை
புத்தியை கோளாராக்கு கிறதே.

மழை நாளில் ...

நாட்கள் நான்காயின
நனைந்த மாலையென ...
 
தொடர் மழையின் யுத்தமும்
சில்லென்ற காற்றின் முத்தமும்
கேட்கும் பாட்டின் சத்தமும்
 பரவசமாக்குகின்றது மனதை
பவித்ரமாக்குகிறது  காற்றை ...

மழைக்கு முன்பான
சுழிக்கும் காற்றோடு
என்மகளின்  ஓட்டத்தை
துரத்திப் பிடித்தேன்
தூறலின் துணையோடு..

கணவரோடு தேநீரும் ,
மகளோடு வாய்ப்பாட்டும் ,
வாய்ப்புகள்  நன்று
வசந்தத்தை உணர...

ஒன்றேகால் வயது மகளோ
இசைகேட்டு ஆடுகின்றாள்;

மழையாலே இத்தருணம்
ஆனது ஆனந்தம் .....


ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ ...

அன்னமே நீயுறங்க
அன்னையிவள் பாடுகின்றேன்

ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ ...

தங்கமே நீயுறங்க
தமிழ்பாட்டு பாடுகின்றேன்

ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ ....

மங்காத என்நிலவே
மைவிழி மூடிநீயுறங்கு

ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ ....

பொங்கிவரும் காவிரியே
பொன்விழி மூடிநீயுறங்கு

ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ .....

புத்தம் புதுமலரே
பூவிழிமூடி நீயுறங்கு

ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ.....

தாலாட்டு

ஆராரோ..ஆரீராரோ..

கண்ணே என் கண்மணியே...
கண்ணுறங்கு பூமணியே!

பொன்னே என் பொன்மயிலே...
நீயுறங்கு நவமணியே!

முத்தே என் முத்தழகே...
விழியுறங்கு என்மகளே!