வியாழன், 6 ஜூன், 2013

நான்.

எழுத மறுக்கும் என் பேனா
என் மனம்  பாரமானால்......

சிரிக்க மறுக்கும் என் உதடுகள்
என் சுயம் சிதைக்கப்பட்டால் .....

நினைக்க மறுக்கும் என் நெஞ்சம்
சோகம் எனும் மேகம் வந்தால்.....

பழக மறுக்கும் என் உள்ளம்
வேசமிட்ட  மோசமுகம் கண்டால்....

பேச மறுக்கும் என் வாய்
கோபமெனும் கேடுவந்தால் ....

உறங்க மறுக்கும் என் விழிகள்
உன்னதங்கள் உடைக்கப்பட்டால்.


சனி, 1 ஜூன், 2013

தாய்மை

உயிரில் கலந்து
உணர்வில் வளரும் உயிரே !
என்னுள் உந்தன் வரவு...
என்னுள் உந்தன்  துடிப்பு..
என்னுள் உந்தன் வளர்ச்சி ..

முதன் முதலாய்
ரசிக்க வைத்தது
உயிரோட்டமான அழகை
என்னோடு நானே !

அழகான மாலையிலே ..

ரம்மியமானஓர் மாலையில் ,
இரண்டு மைனாக்கள்
தத்திக் கொத்தி விளையாடியது
ஒன்று நீ , மற்றொன்று நான் ...



தென்னை மரமிரண்டு
காற்றில் கலந்து
அசைந்தாடிக் கொண்டிருந்தது
ஒன்று நீ, மற்றொன்று நான்...



மரத்தில் குயில்கள் ரெண்டு 
இசையில் சங்கமித்தது
ஒன்று நீ, மற்றொன்று நான்....



இவற்றைக் கண்டு
மேலே முழு நிலவு
முகம் காட்டிச் சிரித்தது -அதில்
பாதி நீ,  மீதி நான்.

வானம்

கறை பட்ட தரையாக  
       மழை கொண்ட வானம்!
கழுவி விட்ட தரையாக
      மழை நின்ற வானம் !