வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பாவேந்தர்

                               
                                       பாவேந்தர்



பாரதி தாசன்
பைந்தமிழ் நேசன்!
இயற்றிய கவிகள்
இயற்கையின்  அருவிகள் !
பாரதிக்கு மட்டுமல்ல
பழந்தமிழுக்கும்  தாசன்.

பூரிக்கும் மழலையைப்போல்
 புதுத்தமிழ்படைக்கும் ஆசான்.
புதுவைக்  கவிமயில்;

இளமைக் கவிகளின்
மனதில் வாழும்
அழகு ஆண்மயில் ;

புதுச்சேரி  வணிகர்
வழி உதித்த  தாசன்;
வீரத் தமிழ்த்தாய்
 பெற்றெடுத்தகவி  யரசன் !