பாவேந்தர்
பாரதி தாசன்
பைந்தமிழ் நேசன்!
இயற்றிய கவிகள்
இயற்கையின் அருவிகள் !
பாரதிக்கு மட்டுமல்ல
பழந்தமிழுக்கும் தாசன்.
பூரிக்கும் மழலையைப்போல்
புதுத்தமிழ்படைக்கும் ஆசான்.
புதுவைக் கவிமயில்;
இளமைக் கவிகளின்
மனதில் வாழும்
அழகு ஆண்மயில் ;
புதுச்சேரி வணிகர்
வழி உதித்த தாசன்;
வீரத் தமிழ்த்தாய்
பெற்றெடுத்தகவி யரசன் !
