திங்கள், 2 செப்டம்பர், 2013


ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ ...

அன்னமே நீயுறங்க
அன்னையிவள் பாடுகின்றேன்

ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ ...

தங்கமே நீயுறங்க
தமிழ்பாட்டு பாடுகின்றேன்

ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ ....

மங்காத என்நிலவே
மைவிழி மூடிநீயுறங்கு

ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ ....

பொங்கிவரும் காவிரியே
பொன்விழி மூடிநீயுறங்கு

ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ .....

புத்தம் புதுமலரே
பூவிழிமூடி நீயுறங்கு

ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக